சிந்து நீர் பாகிஸ்தானுக்கு இல்லை.. பஞ்சாபிற்கும் அனுப்ப முடியாது.. காஷ்மீர் முதல்வர் ஆவேசம்
ஜம்மு: இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நீரைப் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் கால்வாய் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதற்குக் காஷ்மீர் அரசே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தம் இருந்து வந்தது. ஆனால், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்துவிட்டது. இது இந்தியாவின் மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இதுநாள் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் அமலில் இருந்ததால் சிந்து நதிகளில் இந்தியாவால் எந்தவொரு கட்டுமானமும் மேற்கொள்ள முடியாமல் இருந்தது..

சிந்து நதிநீர் ஒப்பந்தம்
இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தனது தேவைகளை நிறைவேற்றக் கால்வாய்களை அமைக்கலாம். இந்தச் சூழலில் தான் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குத் தேவையான நீரைப் பெறச் சிந்து நதிகளில் உள்ள உபரி நீரைத் திருப்பி விடுவதற்காக இந்தியா ஒரு கால்வாய் அமைத்து வருவதாகச் சமீபத்தில் வெளியான தகவல் வெளியானது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதைக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
உமர் அப்துல்லா
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, "நாங்கள் ஏன் பஞ்சாபிற்குத் தண்ணீர் தர வேண்டும்? ஜம்முவிலேயே ஏற்கனவே வறட்சி நிலவுகிறது. எனவே, இங்கிருந்து நீர் செல்வதை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன். முதலில் இங்குள்ள வறட்சியை நாங்கள் தீர்க்க வேண்டும். நான் ஏன் பஞ்சாபிற்கு நீர் அனுப்ப ஒப்புக் கொள்ள வேண்டும்? சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின் கீழ் பஞ்சாபிற்கு ஏற்கனவே தண்ணீர் செல்கிறது. எங்களுக்குத் தேவைப்பட்ட போது அவர்கள் எப்போதாவது தண்ணீர் கொடுத்திருக்கிறார்களா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
45 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினை!
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் பகுதியில் ஷாபூர் கண்டி அணைக் கட்டும் விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகளுக்கு இடையே 45 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினையை உமர் அப்துல்லா சுட்டிக்காட்டினார். 1979ஆம் ஆண்டு இரு மாநிலங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், மத்திய அரசின் தலையீட்டிற்குப் பிறகு 2018ஆம் ஆண்டுதான் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. இந்த அணை ரவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரைத் தடுப்பதற்காகக் கட்டப்பட்டது.
இது குறித்து உமர் அப்துல்லா கூறுகையில், "அந்த அணை இல்லாமல் எவ்வளவு சிக்கல்.. எத்தனை வருடங்கள் அவர்கள் எங்களைக் கண்ணீர்விட வைத்தனர். இப்போது இந்த நீர் எங்களுக்குத்தான். முதலில் நாங்கள் தண்ணீரைப் பயன்படுத்துவோம். அதன் பிறகு மற்றவர்களைத் தருவது பற்றி யோசிப்போம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எதிர்ப்பு
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீரைப் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய வட மாநிலங்கள் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. இந்த முடிவைச் செயல்படுத்துவதற்காக ஜல் சக்தி அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது. பாகிஸ்தானுக்குச் செல்லும் ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், பஞ்சாபிற்கு நீர் வழங்க இப்போது ஜம்முவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications