Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LoC-யில் பாகிஸ்தான் அடாவடி.. ஷெல் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலி.. தொடரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில் எல்லையில் நம்மை சீண்டி வருகிறது அந்த நாட்டின் ராணுவம். நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

pakistan operation sindoor india

'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு துல்லியமாக வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மொத்தம் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நம் நாட்டின் சார்பில் நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் பறந்தன. அதில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நோக்கி வீசப்பட்டது. இப்படியாக 9 பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனது. அந்த நாட்டின் ஏவுகணை தடுப்பு சிஸ்டம் செயல்படவில்லை. இதனால் நம் ஏவுகணையை இடைமறிக்க பாகிஸ்தானால் முடியவில்லை.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கொக்கரித்துள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர்.

இதில் பூஞ்ச் மாவட்டம் தான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் காயமடைந்திருந்த ராணுவ வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் இன்று இரவு இறந்தார்.
வீர மரணமடைந்த ராணுவ வீரரின் பெயர் தினேஷ் குமார். அவருக்கு வயது 32. ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தை சேர்ந்தவர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 5வது ஃபீல்ட் ரெஜிமென்ட் பிரிவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 2014ம் ஆண்டில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். சமீபத்தில் Lance Naik ஆக பதவி உயர்வு பெற்றார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பணியாற்றி வந்த நிலையில் பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியாகி உள்ளார். இந்த தாக்குதலில் இதுவரை ஒரு ராணுவ வீரர், 15 பொதுமக்கள் என மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தத் தாக்குதல் காரணமாக து எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.அதேபோல் காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+