Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாய்லின் புயல்: ஒடிசாவில் பலி எண்ணிக்கை 7 ஆனது!

Subscribe to Oneindia Tamil

Cyclone
புவனேஸ்வர்: பாய்லின் புயல் காரணமாக ஒடிசாவில் பெய்து வரும் கனமழையில் பலி எண்ணிக்கை7 ஆக உயர்ந்துள்ளது.

பாய்லின் புயலால் ஒடிசா கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் சுமார் 500 ராணுவ வீரர்கள் கொண்ட 4 குழுக்கள் இந்திய விமானப்படையின் சி-17 சரக்கு விமானத்தில் 60 துருப்புகள், மீட்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ், ராணுவ வாகனம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே புயலின் தாக்கத்தால் ஒடிசா கடலோர மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையில் வெவ்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததில் 7 பேர் பலியாகி உள்ளனர். கோபால்பூரில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று பேரும் ஜகத்சிங்புர் மாவட்டத்தில் ஒருவரும் புவனேஸ்வரில் ஒருவரும் உயிரிழந்தனர். கஞ்சம் மாவட்டத்தில் காலிகோட் என்ற இடத்தில் மரம் விழுந்ததில் ஒருவரும் பலியானார்.

மேலும் மின்கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துர்கா பூஜைக்கான சிலைகளும் பாதிக்கப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+