இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கு... மேலும் ஒரு ஹவாலா ஏஜென்ட் டெல்லியில் கைது!
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் ரூ.10 கோடியை பரிமாற்றம் செய்த ஹவாலா ஏஜென்ட் நரேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் ரூ.10 கோடியை பரிமாற்றம் செய்த ஹவாலா ஏஜென்ட் நரேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புரோக்கர் சுகேஷ் சந்திரா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தினகரன், மல்லிகார்ஜுனன் ஆகியோரிடம் ராஜாஜி பவனிலும், தினகரன் வீட்டிலும் நேற்று 6 மணி நேரத்துக்கும்மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்காக பேரம் பேசப்பட்ட ரூ.50 கோடியில், முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.10 கோடியை ஹவாலா ஏஜென்ட் நரேஷ், சென்னையிலிருந்து கொச்சி வழியாக டெல்லிக்கு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை டெல்லி விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த மற்றொரு ஏஜென்ட்டை டெல்லி விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications