பதான் காவல் நிலையத்தில் 2 காவலர்களால் 14 வயது சிறுமி பலாத்காரம்: ஒருவர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காவல் நிலைய வளாகத்தில் 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு போலீசாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் முஸாஜங் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ம் தேதி இரண்டு போலீசாரால் கடத்தப்பட்டார். பின்னர் அச்சிறுமியை காவல் நிலைய வளாகத்தில் வைத்து போலீசார் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக வீர்பால்சிங் யாதவ், அவினிஷ் யாதவ் என்னும் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் இருவரும் தலைமறைவானார்கள். அவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டது.
இந்நிலையில், அவ்னிஷ் யாதவ் என்ற காவலர் பரேலி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் டெல்லிக்குத் தப்ப முயன்றபோது பிடிபட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். மற்றொரு குற்றவாளியான வீர்பால்சிங் யாதவைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்தாண்டு மே மாதம் பதானில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications