லாக்டவுன் எதிரொலி.. ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் மட்டும் சம்பளம் வழங்க முடிவு
அமராவதி: முழு முடக்கம் காரணமாக ஆந்திராவில் இந்த மாதம் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் மட்டும் சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது அம்மாநில அரசு.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் மே 3 வரை 49 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழில்கள் முடங்கின, மக்கள் வெளியில் செல்லாமல் வீடுகளுக்கு முடங்கினர். இதன் காரணமாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் முற்றிலும் குறைந்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு தினம் தோறும் 160 கோடி ரூபாய் வரி வருவாய் வர வேண்டிய நிலையில் ரூ.6 கோடி கூட வருவதில்லை என்று தெரிவித்தார். இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் 50 சதவீதம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்பளம் நிதிநிலை சரியான பின்னர் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெகன் அறிவித்தார்.
இந்நிலையில் ஊரங்கு நீட்டித்திருப்பதால் ஏப்ரல் மாதத்தற்கான சம்பளத்திலும் 50 சதவீதம் பிடித்தம் செய்து பின்னர் வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகையில் 50 சதவீதம் பிடிக்கப்பட்டது. அதனால் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் தொகையை 100 சதவீதம் அப்படியே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் போலீஸ், மருத்துவம், சுகாதாரத்துறை, துப்புரவு ஊழியர்கள், தலைமை செயலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 1177 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 81 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
-
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
அன்று vs இன்று.. சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் சந்தித்த பெரிய மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications