மக்கள் வேலை கேட்டால் யோகா பற்றி பேசுகிறாரே பிரதமர் மோடி: ராகுல் தாக்கு
கொல்கத்தா: நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு கேட்கிறார்கள்.. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ யோகா பற்றி பேசுகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த மக்களை ராகுல்காந்தி நேரடியாக சந்தித்து வருகிறார். இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள சணல் ஆலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கட்சி மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கி விட்டன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முன்னேற்றம் அடையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் முன்னேற்றம் என்பது இல்லை. இம்மாநிலம் முடங்கிப் போய்தான் உள்ளது
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். காங்கிரசால் மட்டுமே இத்தகைய முட்டுக்கட்டைகளை உடைத்து வாகனங்கள் உற்பத்தியில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.
நகர்ப்புற எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களை மத்திய அரசு அபகரிக்க முயல்கிறது. மக்கள் வேலைவாய்ப்பைக் கேட்டால் பிரதமர் மோடியோ யோகாவை பற்றி பேசுகிற நிலைமைதான் இருக்கிறது.
இவ்வாறு ராகுல் கூறினார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications