நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம்; தமிழகத்துக்கு உரிமையில்லை: உம்மன் சாண்டி
கொச்சி: முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இதில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை, எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கேரளாவில் உள்ள, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும், தமிழகத்துக்கு சொந்தம் என, அம்மாநில முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்; இது, தவறு.

இந்த அணைகளை பராமரிக்கும் பொறுப்பு, தமிழக அரசிடம் இருந்தாலும், அந்த மாநிலம், இந்த அணைகளுக்கு உரிமை கோர முடியாது. நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள சட்டசபையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., ஜமீலா பிரகாசம் பேசியபோது, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த அணைகள் பாதுகாப்புக்கான தேசிய குழு கூட்டத்தில், 'முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய, நான்கு அணைகளின் முழு உரிமையும், எங்களுக்கே சொந்தம்' என, தமிழகம் வாதிட்டது.
இதற்கு, கேரள அதிகாரிகள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், தமிழகத்தின் வேண்டுகோளை, அணைகள் பாதுகாப்பிற்கான தேசியக் குழு ஏற்றுக்கொண்டு விட்டது. 'பரம்பிக்குளம் ஆழியாறு கூட்டு அணைத்திட்டத்தின் கீழ், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளின் பராமரிப்பை, தமிழகம் செய்து வருவதால், கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையம், அங்கு ஆய்வு செய்ய தேவையில்லை' என, தமிழக அரசு தரப்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறினார்.
இதனால், கேரள சட்டசபையில், கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் உம்மன்சாண்டி தலையிட்டு, 'கேரள மாநிலத்தின் நலன்களுக்கு எதிராக, யாராவது செயல்பட்டிருந்தால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறினார். கேரள சட்டசபையில், தெரிவிக்கப்பட்ட கருத்துகள், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் உம்மன்சாண்டி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications