நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: மோடி அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள்.. எதிர்ப்பு 126
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.
Recommended Video

டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அதனை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 20ஆம் தேதியான இன்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

2003ஆம் ஆண்டுக்கு பின்
அதன்படி லோக்சபாவில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கடந்த 2003ஆம் தேதி அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பாஜக அரசு மீது
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அதே பாஜக அரசு மீது தற்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நேரம் ஒதுக்கீடு
இன்று லோக்சபா கூடியதும் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்றது. இதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.

பாஜகவுக்கு ஆதரவு
இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்த நிலையில் மின்னனு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மோடி அரசு வெற்றி
இதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 325 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
எதிர்க்கட்சிகளுக்கு 126 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. மொத்தம் 451 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

சபாநாயகர் அறிவிப்பு
இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்னிட்டு டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications