மானியம் பெற ஆதார் எண் கட்டாயம்.. ஆனா இல்ல.. மத்திய அமைச்சர்களால் ராஜ்யசபாவில் குழப்பம்
டெல்லி: மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு கூறியபோதிலும், அதிலும் ஒரு இழுவையை சேர்த்துள்ளது.
காஸ் மற்றும் ரேஷன் பொருட்கள் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க உத்தரவிட்ட மத்திய அரசு, ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.
நேற்று மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. சமாஜ்வாடி எம்பி நரேஷ் அகர்வால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் திலீப் திர்க்கே ஆகியோர் விதி 267ன் படி கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ்படி ஆதார் பற்றி உடனே விவாதிக்க வேண்டும் என்று அவை தொடங்கியதும் கோரிக்கை விடுத்தனர்.

நிறுத்த உத்தரவு
விவாதத்தில் பேசிய, சமாஜ்வாடி எம்.பி, ராம்கோபால்யாதவ் (சமாஜ்வாடி): ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம், காஸ் மானியம் உள்ளிட்டவற்றை நிறுத்தும்படி மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

40 சதவீத மக்களிடம் இல்லை
நமது நாட்டில் 40 சதவீத மக்கள் ஆதார் அட்டையை இன்னும் பெறவில்லை. அவர்கள் அனைவரும் அரசின் இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.

கூட்டாட்சி இதுவா
டெரிக் ஓபிரையன் கூறுகையில், மத்திய அரசு கூட்டாட்சியை பற்றி பேசுகிறது. ஆனால் மாநிலங்களை ஆலோசிக்காமல் முடிவுகளை தனியே எடுக்கிறது. ஆதார் எண் கட்டாயம் என்பது இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

கட்டாயம் இல்லை என்கிறார் வெங்கையா
இவ்வாறு உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஆதார் எண் வழியாக அரசு மானியங்களை பெற வசதியாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறி உள்ளது.
இருப்பினும் உறுப்பினர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். ஆதார் எண் கட்டாயமில்லை. ஒருவேளை தேவைப்பட்டால், அந்த சமயத்தில் தேவையான உத்தரவுகள் வழங்கப்படும் என்றார்.

3 மாதத்தில் கட்டாயம் என்கிறார் பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ஆதார் எண் இல்லாதவர்களை அடுத்த 3 மாதத்திற்குள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்களது காஸ் மானியம் தனியாக நிறுத்தி வைக்கப்படும். இது முற்றிலும் தடை அல்ல. தற்போது 85 சதவீதம் மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களை எடுக்க மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார். மத்திய அமைச்சர்கள் இருவரும் உறுதியான ஒரு தகவலை தெரிவிக்காததால் அமளி நீடித்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications