நவம்பர் 8ல் தேசிய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டம் ?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து நவ,.8-ல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன.
டெல்லி : மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்தது. அதனால் ஒரே நாள் இரவில் 15 லட்சம் கோடி ரூபாய் செல்லாதவை ஆகிப்போனது.

இதில் ஏழை எளிய நடுத்தர மக்களும், சிறு மற்றும் குறு வியாபாரிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இப்போது வரையிலும் அதில் இருந்து மீண்டதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற எட்டாம் தேதியோடு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. இதை இன்னமும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது.
இதில் முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, பொருளாதார பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் வரும் நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications