தாய்மொழி பாடலுக்கு ஆட மறுத்த டான்சர் சுட்டுக் கொலை... திருமண விழாவில் அதிர்ச்சி!
பாலியா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழா ஒன்றில் தாய்மொழிப் பாடலுக்கு ஆட மறுத்தப் பெண் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெண் நடனக் கலைஞர் பியூ (23). திருமண விழா உள்ளிட்டவற்றில் நடனம் ஆடுவது பியூவின் தொழில்.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் கலைநிகழ்ச்சியில் பியூ நடனமாடினார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர் தங்களது தாய்மொழிப் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும்படி பியூவை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு நடனமாட பியூ மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பப்லுகுமார் என்ற பார்வையாளர் பியூவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பியூ பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பியூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பப்லுகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் திருமண வீட்டில் நிலவிய சந்தோஷம் மறைந்து சோகமான சூழ்நிலை உண்டானது.












Click it and Unblock the Notifications