Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் பென்சன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு இன்று அறிவிக்கை வெளியிட்டது

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை ஏற்பதாக, மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. கடுமையான நிதிச்சுமை இருந்தபோதும், முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் கருதி, இந்த கோரிக்கையை ஏற்பதாக ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், அறிவித்தார். கோரிக்கை தாமதமாக நிறைவேற்றப்பட்டதற்கு, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசின் மந்தமான செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தீபாவளிக்கு முன்னதாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த 5-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதில்,எதிர்காலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக மத்திய அரசுக்கு சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+