சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.. மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடக்கம்
Recommended Video
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அங்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு உள்ளார்கள்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அயப்பன் கோவில் கேரள மாநிலத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகர விளக்கு வழிபாடு வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி ஐந்து கட்டங்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் 10 ஆயிரத்து 17 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கேரள மாநில காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹரா திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், இந்த ஆண்டு சபரிமலை சீசனில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதனிடையே டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 போலீஸ் சுப்பிரண்டுகள் மற்றும் உதவி சுப்பிரண்டுகள், 112 துணை போலீஸ் சுப்பிரண்டுகள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 சப் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிலும் 8,402 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 307 பேர் பெண் போலீசார் ஆவர்.
முதல்கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை 2551 பேர் சன்னிதானத்திலும், பம்பை, நிலக்கல், பத்தணம்திட்டாவிலும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications