சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.. மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடக்கம்
Recommended Video
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அங்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு உள்ளார்கள்.
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அயப்பன் கோவில் கேரள மாநிலத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மகர விளக்கு வழிபாடு வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி ஐந்து கட்டங்களாக சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் 10 ஆயிரத்து 17 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கேரள மாநில காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கேரள மாநில டிஜிபி லோக்நாத் பெஹரா திருவனந்தபுரத்தில் நேற்று கூறுகையில், இந்த ஆண்டு சபரிமலை சீசனில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இதனிடையே டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், 24 போலீஸ் சுப்பிரண்டுகள் மற்றும் உதவி சுப்பிரண்டுகள், 112 துணை போலீஸ் சுப்பிரண்டுகள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 சப் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிலும் 8,402 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 307 பேர் பெண் போலீசார் ஆவர்.
முதல்கட்டமாக வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை 2551 பேர் சன்னிதானத்திலும், பம்பை, நிலக்கல், பத்தணம்திட்டாவிலும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications