மிஸ்டர் மோடி.. ஹைதராபாத்தில் போட்டியிட தயாரா? சவால் விடுகிறது மஜ்லிஸ் கட்சி!
ஹைதராபாத்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா என்று மஜ்லிஸ் கட்சி சவால்விடுத்துள்ளது.
ஆந்திராவில் மஜ்லிஸ் கட்சிக்கு ஹைதராபாத்தில் செல்வாக்கு உள்ளது. இக்கட்சியின் தலைவர் ஒவைசி அசாதுதீன் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
மஜ்லிஸ் கட்சியின் 56-வது ஆண்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் பேசிய ஒவைசி அசாதுதீன், சீமாந்திராவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மஜ்லிஸ் கட்சி பின் வாங்காது. அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நமது கட்சி இருக்கும்.
சீமாந்திரா அரசியலில் எம்.ஐ.எம். முக்கிய பங்கு வகிக்கும். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய அளவில் எம்.ஐ.எம். கட்சி போராடும். வரும் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்தால் தெலுங்கானா பகுதியில் அக்கட்சி தோல்வியை சந்திக்கும்.
மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக சொல்கிறார்கள். செல்வாக்கு இருந்தால் அத்வானியோ, மோடியோ ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா? என்றார்.