கார்த்தி சிதம்பரம் கைது எதிரொலி.. லண்டனில் இருந்து அவசரமாக இந்தியா திரும்புகிறார் ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கார்த்தி சிதம்பரம் கைதையடுத்து லண்டனில் இருந்து அவசரமாக இந்தியா திரும்புகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக சென்றிருந்தார் ப. சிதம்பரம். இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இன்று காலை சென்னையில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

அவரை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ இன்று ஆஜர்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலை பற்றி நிருபர்கள் சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பியபோது பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிகழ்ச்சிகளை ரத்து செய்த சிதம்பரம் அவசரமாக இந்தியா திரும்புகிறாராம்.












Click it and Unblock the Notifications