மீண்டும் சர்ச்சையில் ஆர்.கே.பச்சோரி... சில்மிஷப் பேச்சுக்களை புட்டுப் புட்டு வைத்த முன்னாள் ஊழியை
டெல்லி: தேரி அமைப்பின் துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஆர்.கே. பச்சோரி மீது இன்னொரு முன்னாள் பெண் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
தேரி அமைப்பின் தலைவராக முன்பு இருந்தவர் பச்சோரி. அப்போது இவருக்கு எதிராக பாலியல் புகார் கிளம்பியது. இதையடுத்து அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தலைவர் பதவியிலிருந்து விலகினார். மேலும், சர்வதேச பருவ நிலை மாற்றம் தொடர்பான குழுவின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.

மீண்டும் பதவி
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேரி அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பச்சோரி. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட பதவியாகும்.

புதிய பாலியல் புகார்
இந்தச் சூழ்நிலையில் பச்சோரி மீது புதிய பாலியல் புகார் கிளம்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது விடுமுறையில் போய் விட்டார் பச்சோரி. மேலும் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

தேரி ஊழியையின் பாலியல் புகார்
தேரி அமைப்பில் முன்பு பணியாற்றிய பெண் ஊழியை ஒருவர் பச்சோரி செய்த செயல்கள் குறித்து விரிவாக விளக்கி பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் பச்சோரி மீது பரபரப்பு புகார்களை அவர் சுமத்தியுள்ளார்.

தனியாக இருக்கும் சமயத்தில் சில்மிஷம்
இதுகுறித்து அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது... நான் தேரியில் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் பச்சோரி சேட்டையை ஆரம்பித்து விட்டார். எனக்கு அசிங்கமான கெட்ட வார்த்தையால் ஒரு பெயரை சூட்டினார். கேட்டால் செல்லப் பெயர் என்றார்.

இதுதான் உனக்குப் பொருந்தும்
இதுதான் இனி உனது பெயர். இதுதான் உனக்குப் பொருத்தமான பெயர் என்று கூறினார். பூக்கள் எவ்வளவு அழகானது தெரியுமா.. அழகான பூக்களைத் தேடித்தான் வண்டுகள் ஓடி வரும் என்றும் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

எல்லாமே தப்பு
என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள் எல்லாமே செக்ஸ் ரீதியில்தான் இருந்தன. இரட்டை அர்த்தத்தில்தான் பேசுவார். என்னால் அவருடன் பணியாற்றவே முடியவில்லை.

குண்டாக இருப்பவர்களை தூக்க முடியும்
ஒரு முறை என்னிடம் அவர், என்னால் குண்டாக இருப்பவர்களை ஈஸியாக தூக்க முடியும். எவ்வளவு குண்டாக இருந்தாலும் பரவாயில்லை. நான் ஈஸியாக தூக்கி விடுவேன் என்றார். உன்னைக் கூட என்னால் ஈஸியாக தூக்க முடியும் என்றும் கூறினார்.

ஆண்மை பற்றிப் பேசுவார்
மேலும் தான் உடல் ரீதியாக வலிமையாக இருப்பதாகவும், ஆண்மையுடன் இருப்பதாகவும் அடிக்கடி என்னிடம் கூறி பேசுவார். அவரது பேச்சுக்களின் நோக்கமே என்னுடன் நெருங்க வேண்டும் என்பதுதான்.

வெளியில் சந்திக்க முயற்சித்தார்
அலுவலகம் மட்டுமல்லாமல் என்னை வெளியில் வைத்தும் சந்திக்க பல தடவை முயன்றார். ஆனால் நான் அவரது அழைப்புகளை ஒருபோதும் ஏற்றதில்லை.

மசாஜ் செய்யட்டா?
ஒரு முறை நான் உடல் நலமின்மையால் அலுவலகத்திற்குப் போகவில்லை. உடனே எனது செல்போனுக்குப் போன் செய்து என்ன என்று கேட்டார். நான் தலைவலியாக இருப்பதால் வரவில்லை என்று கூறியபோது நான் நன்றாக மசாஜ் செய்வேன். செய்து விடவா என்று கேட்டார்.

வாய்ப்புகளுக்காக வலை விரித்தார்
அவர் வாய்ப்புகளுக்காக காத்திருந்தார், எனக்கு வலை விரித்தார் என்பதை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. எனது தந்தையின் வயதை ஒத்த நபர் அவர். அவரது செயல்கள் எனக்கு அதிர்ச்சி அளித்தன என்று அவர் கூறியுள்ளார்.
பச்சோரி தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேட்டது தொடர்பாகவும் அவர் பல பரபரப்பு தகவல்களை இந்த பகிரங்கக் கடிதத்தில் வெளியிட்டுள்ளார். இவரது புகாரால் பச்சோரியின் நிலை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications