குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் விழா கோலாகலம்.. பத்ம விபூஷண் விருது பெற்றார் இளையராஜா
பத்ம விருதுகள் தொடங்கப்பட்டது. இதில் முதலில் இளையராஜவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் முதலில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இந்த விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். அதில் 3 பேருக்கு பத்மவிபூஷண் விருதுகளும், 9 பேருக்கு பத்மபூஷண் விருதுகளும், 73 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன.
முதலில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications