இவன் தான் அந்த கொடூரன்.. ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியீடு
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 27 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கென்றனர்.

இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 27 பேர் பலியாகினர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்
சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியாகி உள்ளது.
அந்த போட்டோ என்பது பயங்கரவாதியின் பின்னால் இருந்து ஒருவர் எடுத்துள்ளார். இதனால் அவரது முகம் தெரியவில்லை. ஆனாலும் அந்த நபர் சிவப்பு நிற ஜிப்பா அணிந்து கையில் துப்பாக்கி வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த கொடூர பயங்கரவாதி உள்பட அவனுடன் சேர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மேலும் 3 பேர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications