பாக். படகில் வந்தவர்கள் தீவிரவாதிகளே.. கடத்தல்காரர்கள் என சொல்வது அபத்தம் - பாரிக்கர்
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்திய கடல் பகுதிக்குள் படகில் ஊடுறுவி வந்தவர்கள் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என கூறுவது அபத்தமானது. அவர்கள் தீவிரவாதிகள்தான் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
படகில் இருந்த நான்கு பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கடத்தல்காரர்கள் அல்ல. கடத்தல்காரர்களாக இருந்தால் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் என்றும் பாரிக்கர் கேட்டுள்ளார்.
அவர்கள் தற்கொலை செய்து கொண்டதால்தான் அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகம் வலுத்துள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

கடத்தல்காரர்கள் என்று கூறுவது அபத்தமானது:
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த நான்கு பேரும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறுவதே தவறானது, அபத்தமானது. மேலும் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையும், அவர்கள் வந்த பாதையும், கடத்தல்காரர்கள் வரும் பாதை அல்ல.
மேலும் மீனவர்கள் இந்தப் பாதையில் வரவும் மாட்டார்கள். இவர்கள் வந்த பாதை யாருமே வராத தனித்த பாதையாகும்.
இவர்கள் வந்த பாதையும் ஏதோ ஒரு குறிக்கோளுடன் வந்ததையே உணர்த்துகிறது. கடத்தல்காரர்கள் செய்யும் எந்த செயலையும் இவர்கள் செய்யவில்லை.
சிறப்பாக பணியாற்றிய கடலோரக் காவல் படை:
பாகிஸ்தான் படகு விவகாரத்தில் கடலோரக் காவல் படை செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. மிகச் சிறந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் படகு எந்த வகையிலும் தப்பி விடாத வகையில் மிகச் சிறப்பாக தடுத்து நிறுத்தியுள்ளனர். சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார் பாரிக்கர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications