இந்திய தூதரக அதிகாரிகளை ரகசியமாக கண்காணிக்கும் ஐ.எஸ்.ஐ..: சுஷ்மா 'திடுக்' தகவல்
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பால் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சம் சுஷ்மா ஸ்வராஜ் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படுவது தொடர்பாக லோக்சபாவில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளிக்கும்போது, கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை உடனடியாக அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, பாகிஸ்தானை தவிர மற்ற நாடுகளில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை ரகசியமாக பின்தொடர்வது உட்பட அவர்களின் நடவடிக்கைகளை அந்நாட்டு உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசின் பல்வேறு நிலைகளில் கொண்டு செல்லப்பட்டு, கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தூதரக அதிகாரி தேவயானி கோபரகடே அவமதிக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்தது. தேவயானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். இந்த வழக்குகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரிய சலுகைகள் மற்றும் சட்டப்பாதுகாப்பு தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் சால்வேனியா, ருமேனியா, அல்பேனியா மற்றும் பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட சம்பவங்களை சுஷ்மா தனது பதிலில் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம், மரபுகளுக்கு எதிராக நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோல் இந்திய பிரபலங்கள் பலர் வெளிநாடுகளில் அவமதிக்கப்பட்ட சம்பவங்களையும் சுஷ்மா குறிப்பிட்டார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications