குஜராத் மீனவர்கள் மீது பாக். கடற்படை துப்பாக்கிச் சூடு- ஒருவர் படுகாயம் - 24 மீனவர்கள் கைது!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் 24 மீனவர்களை 4 படகுகளுடன் பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது.

குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் கடற்படை அண்மைக்காலமாக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி கைது செய்து வருகிறது. ஏற்கெனவே ஒரு குஜராத் மீனவரை சுட்டுப் படுகொலையும் செய்திருந்தது பாகிஸ்தான் கடற்படை.

Pak. Navy attack Gujarat fishermen

இந்நிலையில் இன்று காலை ஜகாவோ துறைமுகத்தில் இருந்து சென்ற மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு மீனவர் படுகாயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து 4 படகுகளுடன் 24 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது. இது குஜராத் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+