கத்திச் சண்டை போடுவதா அல்லது அமைதியாக போவதா.. முடிவு மோடி கையில்: சொல்கிறது பாக்.!
டெல்லி: கடந்த காலத்தை நாம் நிச்சயம் மறக்க முடியாதுதான். இருப்பினும் நாம் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்லுறவுடன் திகழ முன்வர வேண்டும். அமைதியுடன் வாழ முயற்சிப்பதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை புதிய இந்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசு குறித்து பாசித் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம். வெறுப்புணர்வை புதைத்து விட்டு வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளும் அடி போட வேண்டும் என்று விழைகிறோம். அதற்காக இந்தியாவடன் கை கோர்த்துச் செயல்பட பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.

கடந்த காலத்தை இரு தரப்பாலும் மறக்க முடியாதுதான். இருப்பினும் வளர்ச்சியே நமது பிரதான முன்னுரிமையாக இருக்க வேண்டும். எங்களது கருத்துக்கு புதிய இந்திய அரசும் உடன்படும் என்று நம்புகிறோம்.
அமைதியை ஏற்படுத்துவதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும்.
சமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம் என்றார் பாசித்.












Click it and Unblock the Notifications