கத்திச் சண்டை போடுவதா அல்லது அமைதியாக போவதா.. முடிவு மோடி கையில்: சொல்கிறது பாக்.!
டெல்லி: கடந்த காலத்தை நாம் நிச்சயம் மறக்க முடியாதுதான். இருப்பினும் நாம் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்லுறவுடன் திகழ முன்வர வேண்டும். அமைதியுடன் வாழ முயற்சிப்பதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை புதிய இந்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளார்.
இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசு குறித்து பாசித் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம். வெறுப்புணர்வை புதைத்து விட்டு வளர்ச்சிப் பாதையில் இரு நாடுகளும் அடி போட வேண்டும் என்று விழைகிறோம். அதற்காக இந்தியாவடன் கை கோர்த்துச் செயல்பட பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.

கடந்த காலத்தை இரு தரப்பாலும் மறக்க முடியாதுதான். இருப்பினும் வளர்ச்சியே நமது பிரதான முன்னுரிமையாக இருக்க வேண்டும். எங்களது கருத்துக்கு புதிய இந்திய அரசும் உடன்படும் என்று நம்புகிறோம்.
அமைதியை ஏற்படுத்துவதா அல்லது தொடர்ந்து கத்திச் சண்டை போடுவதா என்பதை இந்தியாதான் முடிவு செய்ய வேண்டும்.
சமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம் என்றார் பாசித்.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார்












Click it and Unblock the Notifications