For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்- இந்திய நிலைகள் மீது தாக்குதல்

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குல் நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர்ல் 10 நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர், துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக மோட்டார் ரக பீரங்கிகள் மூலம் அத்துமீறி தாக்குதல் நடத்திவந்தனர். இதனால் சம்பா, கதுரா மாவட்டத்தில் உள்ள சுமார் 32 ஆயிரம் பேர் தங்கள் கிரமங்களை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து 192 கீலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லையில் வியாழக்கிழமை இரவில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபடவில்லை.

Pakistan continues to violate ceasefire along LoC

இதன் காரணமாக எல்லையில் அமைதி நிலை திரும்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேர அமைதிக்கு பிறகு எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

English summary
Pakistan continued shelling civilian population on the Indian side along the international border and the Line of Control (LoC) in Jammu Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X