குழந்தைக்கு விசா கிடைக்காமல் தவித்த பெண் – பாகிஸ்தான் திரும்பினார்
ஜெய்ப்பூர்: இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு விசா இன்றி தவித்த மாய் பாத்திமா என்ற பெண் பாகிஸ்தான் திரும்பி சென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் வாழ்ந்த தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் மாய் பாத்திமா என்ற பெண் தனது தாயை சந்தித்து ஆறுதல் கூற கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கணவருடன் ராஜஸ்தானுக்கு வந்தார்.
இந்தியாவில் பிரசவம்:
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 14 ஆம் தேதி ஜெய்சால்மர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் தார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற போது அவர்களின் பாஸ்போர்ட்டில் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாததால், இந்திய எல்லையை விட்டு அனுப்ப குடியுரிமை துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
விசாவுக்கு கோரிக்கை:
இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பிறந்ததற்கான அரசு சான்றிதழை பெற்ற மாய் பாத்திமாவின் கணவர் மீர் முகம்மது தங்கள் மகனுக்கு விசா கேட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தை நாடினார்.
ஏக்கத்தில் பாத்திமா:
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கையில் 15 நாள் பச்சிளம் குழந்தையுடன், எப்போது விசா கிடைக்கும் என்ற ஏக்கத்தில் மாய் பாத்திமா கடந்த ஒரு வாரமாக கவலையுடன் தவித்துக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் திரும்பினர்:
இந்நிலையில், பிறந்த குழந்தையுடன் அந்த தம்பதியர் இந்தியாவை விட்டு செல்ல பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி அளித்ததால் நேற்று அவர்கள் ஜோத்பூர் வழியாக பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றதாக மாய் பாத்திமாவின் தாத்தா ரசூல் கான் தெரிவித்தார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications