Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லையில் அத்துமீறும் பாக்- உடன் இந்தியா பேச்சுவார்த்தை... வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத் : எல்லையில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் வரும் 23 ஆம் தேதி இந்தியா வருகிறார்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த மாதம் ரஷியாவின் உபா நகரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

pak- ind

அதன்படி இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்த மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடத்த இந்தியா விரும்பியது. அதன்படி இந்த பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் தயாரிப்பில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்தடுத்த தாக்குதல்களை அரங்கேற்றினர். மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியும், பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது உறுதியானது.

ஆனால் காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்று வழக்கம் போல மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், அந்த தாக்குதல் இந்திய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் கூறியது.

இந்த காரணங்களால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது. எனினும் இந்த சந்திப்பை ரத்து செய்வது தொடர்பாக எந்த தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த சந்திப்பை பாகிஸ்தான் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் வரும் 23-ஆம் தேதி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசுடன் விவாதித்த பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அஜீஸ் கூறினார்.

இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான முதலாவது பேச்சுவார்த்தை, இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+