எல்லையில் அத்துமீறும் பாக்- உடன் இந்தியா பேச்சுவார்த்தை... வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவு
இஸ்லாமாபாத் : எல்லையில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் வரும் 23 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த மாதம் ரஷியாவின் உபா நகரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்த மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடத்த இந்தியா விரும்பியது. அதன்படி இந்த பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் தயாரிப்பில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்தடுத்த தாக்குதல்களை அரங்கேற்றினர். மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியும், பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது உறுதியானது.
ஆனால் காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்று வழக்கம் போல மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், அந்த தாக்குதல் இந்திய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் கூறியது.
இந்த காரணங்களால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது. எனினும் இந்த சந்திப்பை ரத்து செய்வது தொடர்பாக எந்த தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த சந்திப்பை பாகிஸ்தான் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் வரும் 23-ஆம் தேதி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசுடன் விவாதித்த பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அஜீஸ் கூறினார்.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான முதலாவது பேச்சுவார்த்தை, இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications