மோடி பதவியேற்பு- நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக 151 குஜராத் மீனவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் கடல் எல்லையில் குஜராத் மாநிலம் இருக்கிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாகிஸ்தான் அரசால் குஜராத் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கம். இதேபோல் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்து பின்னர் விடுவிக்கப்படுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நாளை மறுநாள் பதவியேற்க இருக்கிறார் .இதையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் வாடும் 151 குஜராத் மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications