பொய்ய சொன்னாலும் பொருந்த சொல்லனும்... சுட்டு வீழ்த்தப்பட்டது பாக். போலீஸ் கண்காணிப்பு விமானமே...
டெல்லி: இந்திய ஆளில்லா வேவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறி வருவது அப்பட்டமான பொய் எனத் தெரியவந்துள்ளது. அந்த நாட்டு போலீசுக்கு சொந்தமான சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா கண்காணிப்பு விமானம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ஆளில்லா வேவுவிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் அது சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் நாட்டு போலீசுக்கு சொந்தமானது.

இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும் போதெல்லாம் அந்நாட்டு ராணுவம் எப்படியெல்லாம் குறுக்குசால் ஓட்டுகிறது... குழப்புகிறது என்பதற்கு இதுதான் நல்ல உதாரணம்.. ரஷ்யாவின் உஃபா நகரில் இருநாட்டு தலைவர்களும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதே எல்லையில் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம்.
தற்போது இந்திய ஆளில்லா வேவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக கதைவிடுகிறது.. பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது அந்நாட்டின் பஞ்சாப் மாகாண போலீசுக்கு சொந்தமான விமானத்தைத்தான்.. அந்த கண்காணிப்பு விமானத்தைத்தான் தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டிருக்கிறது பாகிஸ்தான் ராணுவம்..
இந்த நெடுஞ்சாலை ஆளில்லா கண்காணிப்பு விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. இது போன்ற விமானங்களை இந்தியா பயன்படுத்தியதே இல்லை என்று ஒன் இந்தியாவுக்கு உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் அந்நாட்டு பிரதமர் இந்தியாவுடன் அமைதி முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறார்.. ஆனால் அந்நாட்டு ராணுவம் இதனை ஒப்புக் கொள்ளாமல் குழப்பிக் கொண்டு இருக்கிறது. இதற்காக காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவத்தினருக்கு பணத்தை வாரி இறைக்கிறது... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகளுக்கு ஊதியத்தை இரு மடங்காக்கியுள்ளது..
இவை அனைத்துமே இந்தியாவுடன் அமைதி முயற்சிகளை மேற்கொள்ளும் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டு ராணுவம் விடுக்கின்ற ஒரு எச்சரிக்கையே என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications