பாகிஸ்தான் பாடகர் அட்னன் சாமிக்கு இந்திய குடியுரிமை
மும்பை: பாகிஸ்தான் பாடகர் அட்னன் சாமிக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், காஷ்மீரைச் சேர்ந்த தாய்க்கும் லண்டனில் பிறந்தவர் அட்னன் சாமி. பாலிவுட்டில் பிரபல பாடகராக உள்ளார். இங்கிலாந்தில் வளர்ந்த அவர் கனடா பாஸ்போர்ட் வைத்துள்ளார். மேலும் கடந்த மே மாதம் வரை அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

2001ம் ஆண்டு முதல் அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் இந்திய இசைத்துறையில் சேவை செய்து வரும் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
அட்னன் கடந்த மே மாதத்துடன் முடிந்த தனது பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவில்லை. இதையடுத்து அவர் காலவரையின்றி இந்தியாவில் தங்க கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் தான் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. அண்மையில் மும்பையில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி சிவசேனாவின் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications