சரப்ஜித் சிங் கொலை வழக்கு: இரண்டு கைதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை லாகூர் கோர்ட்டில் நடைபெற்றது. கொலை தொடர்பாக இரண்டு கைதிகள் மீது குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லாகூரில் உள்ள கோட் லாக்பத் மத்திய சிறையில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வுகள் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கைதிகள் அமீர் சர்ஃப்ராஸ் என்ற தம்பா மற்றும் முடாசார் பஷீர் ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.
பின்னர் நீதிபதி சையத் அஞ்சும் ராசா செயத் வரும் 20ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அப்போது சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வக்கீலுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications