ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகள் மீது பாக். துப்பாக்கி சூடு தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
பூஞ்ச்: ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே நாங்கி தெக்ரி என்ற இடத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரவு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இதனையடுத்து இத்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயம் அடையவில்லை என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications