இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு!
ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது. இதற்கு, இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 8 முறை இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் காலையில் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவமும் அதே வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலையில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் சம்பவம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications