இந்திய எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு!
ஸ்ரீநகர்: இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது. இதற்கு, இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 8 முறை இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் காலையில் பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவமும் அதே வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலையில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதல் சம்பவம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications