பதன்கோட் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் மசூத் அசாரை கைது செய்யவே இல்லை: உளவுத் துறை
டெல்லி: பதன்கோட் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக இருந்த ஜெய்ஷ் இ முகமுது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் இன்னும் பாகிஸ்தானால் கைது செய்யப்படவில்லை என்று இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
பதன்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார் தான் முக்கிய மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அசாரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்ததாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அரசோ அசார் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தது.

இந்நிலையில் அசார் கைது செய்யப்படவே இல்லை என்றும், பதன்கோட் தாக்குதல் தொடர்பாக அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஏதோ சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வைத்திருந்த காரணத்திற்காக அவர்களை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் கைதுக்கும் பதன்கோட் தாக்குதல் வழக்கிற்கும் தொடர்பு இல்லை.
அசார் கைது செய்யப்பட்டதாக முன்பு கிடைத்த தகவல் பாகிஸ்தான் உளவு ஏஜென்சிக்களால் பொய்யாக பரப்பிவிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதன்கோட் விமானப்படை தளத்தை தாக்கிய தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண்கள் குறித்த விபரங்கள் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த செல்போன் எண்களின் உரிமையாளர்கள் யார் என்பதை பாகிஸ்தான் இதுவரை தெரிவிக்கவில்லை என்கிறது உளவுத் துறை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications