டெங்கு நோயாளியை பலாத்காரம் செய்த காமக் கொடூர பாக். டாக்டர்... அப்பல்லோவில் கொடுமை!

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளி ஒருவரை பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் மருத்துவமனையிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இவரையும் இவருக்கு உடந்தையாக இருந்த வார்ட் உதவியாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

21 வயதான பெண் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். நோய் தீவிரமானதால் காந்திநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியூ வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Pakistani doctor, ward boy arrested for allegedly raping dengue patient in Apollo ICU in Gandhinagar

இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து அகமதாபாத் நகரில் தங்கி டாக்டராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் சவுகான் இரவுப் பணியில் இருந்துள்ளார். இரவு நேரத்தில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் ஐசியூ வார்ட்டுக்கு வந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அவருக்கு உறுதுணையாக வார்ட் உதவியாளர் சந்திரகாந்த் வாங்கர் இருந்துள்ளார்.

இதுகுறித்து நோயாளிப் பெண் உறவினர்களிடம் முறையிட்டதையடுத்து, போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, டாக்டரையும் வார்டு உதவியாளர் சந்திரகாந்த் வாங்கரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+