காஷ்மீரில் பிடிபட்ட 'அப்ரெண்டிஸ்' பாக். தீவிரவாதி... அமுக்கினிகளான பாகிஸ்தான் ஊடகங்கள்!!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி கிராம மக்களை சிறைபிடித்த பாகிஸ்தான் தீவிரவாதி உயிரோடு சிக்கியுள்ளான். அவனும் இந்துக்களைக் கொல்வதற்காகவே ஊடுருவியதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களோ இதுபற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றன.

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒரு தீவிரவாதியை சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களே தைரியமாகப் பிடித்து ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

Pakistani media remains mum on the arrest of terrorist in J&K

கைது செய்யப்பட்ட தீவிரவாதி முகமது நவீத் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளிவுறவு அமைச்சரக அதிகாரி, ஆமாம், கைது பற்றி கேள்விப்பட்டோம், ஆனால் இது பாகிஸ்தானை சிக்கவைக்க இந்திய அதிகாரிகள் மேற்கொள்ளும் இன்னொரு தந்திரமாகதான் தெரிகிறது என கூறியுள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தான் வெளிவுறவுத் துறை அதிகாரபூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. அதேபோல் பாகிஸ்தானின் அச்சு ஊடகங்கள் இது பற்றி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவும் இல்லை.

அதே நேரத்தில் ஒரு சில தொலைக்காட்சிகள் இந்தியா எல்லையில் இருந்து தாக்குதல் நடத்தியதாகவும் இதில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் மட்டும் செய்திகள் ஒளிபரப்பின. அதே நேரத்தில் இந்தியாவிடம் சிக்கியுள்ள தீவிரவாதி நவீத் பற்றி மூச்சே விடவில்லை இந்த ஊடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+