தொண்டையில் இட்லி சிக்கி முதியவர் சாவு: ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒணம் பண்டிகையையொட்டி நடைபெற்ற இட்லி சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற முதியவர் தொண்டையில் இட்லி சிக்கியதால் பரிதாபமாக பலியானார். கேரளாவில் ஓணம் பண்டிகை பெரும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விளையாட்டு போட்டிகள்
ஓணம் பண்டிகையையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இட்லி சாப்பிடும் போட்டி
இதில் வித்தியாசமாக, பாலக்காட்டு அருகே இட்லி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது.
அதிவேகமாக விழுங்கினார்
பாலக்காடை சேர்ந்த கந்தமுதன் (55) என்பவர் இந்த போட்டியில் கலந்து கொண்டு இட்லிகளை பிய்த்து வாயில் தள்ளிக் கொண்டிருந்தார். போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று அதி வேகமாக இட்லியை விழுங்கியுள்ளார்.
முச்சு திணறல்
கந்தமுதன் இட்லி சாப்பிட்ட போது அவரது தொண்டைக்குள் இட்லி சிக்கிக் கொண்டது. இதனால் மூச்சு விடமுடியாமல் அவர் திணறினார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே கந்தமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.