தெலுங்கானா விவகாரம்: மத்திய உயர்நிலைக்குழு இன்று ஆய்வு
Subscribe to Oneindia Tamil

தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மாநிலங்களுக்கான சொத்துகளை பிரிப்பது தொடர்பாக ஆராய மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த உயர் நிலைக்குழு இன்று ஹைதராபாத் சென்று அங்கு மாநில அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை மத்தியக் குழு சந்தித்து ஆலோசனைகளைப் பெறுகிறது.
தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் போது நிர்வாகத்தை எவ்வாறு வரையறுப்பது என்பது தொடர்பாகவும் இக் குழு ஆராய்கிறது. இக் குழுவின் அறிக்கை, தெலுங்கானா விவகாரங்களை கவனித்து வரும் மத்திய அமைச்சரவைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications