டைகர் மேமனை பிடித்து வந்து தூக்கிலிடுங்கள், யாகூபை அல்ல: சல்மான் கான்
மும்பை: யாகூப் மேமனை அல்ல மாறாக அவரது சகோதரர் டைகர் மேமனை ஊர்வலமாக அழைத்துச் சென்று தூக்கிலிடுங்கள் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு வரும் 30ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் யாகூப் மேமனுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். முக்கிய குற்றவாளியான டைகர் மேமனை விட்டுவிட்டு அவரது சகோதரர் யாகூபை தூக்கிலிடுவதா என்று சல்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
டைகர்
டைகரை பிடித்து தூக்கிலிடுங்கள். அவரை ஊர்வலமாக அழைத்துச் செல்லுங்கள் அவரின் சகோதரரை அல்ல என்று சல்மான் தெரிவித்துள்ளார்.
|
மனிதநேயம்
ஒரு அப்பாவி மனிதரை கொலை செய்வது மனிதநேயத்தை கொலை செய்வது போன்று ஆகும் என்று சல்மான் ட்வீட் செய்துள்ளார்.
|
எங்கே?
டைகருக்காக அவரது சகோதரரை தூக்கிலிட உள்ளனர். டைகர் எங்கே உள்ளார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சல்மான்.
|
ட்வீட்
இது குறித்து ட்வீட் செய்ய வேண்டும் என 3 நாட்களாக நினைத்தேன். ஆனால் பயமாக இருந்தது. இது ஒரு நபரின் குடும்பத்துடன் தொடர்புடையது. ஓடிப்போனவரை கண்டுபிடித்து தூக்கிலிடுங்கள், அவரது சகோதரரை அல்ல என்று தெரிவித்துள்ளார் சல்மான்.
|
பூனை
எங்கு மறைந்து கொண்டிருக்கிறாய் டைகர்? அவர் டைகர் அல்ல பூனை. ஒரு பூனையை நம்மால் பிடிக்க முடியவில்லை என்று சல்மான் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications