நிராகரித்த ஹிண்டால்கோவுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏன்? பரேக் விளக்கமளிக்கவில்லை- சிபிஐ

1993-ஆம் ஆண்டிலிருந்து செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்துவரும் சிபிஐ, இதுவரை 14 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இதில் 1993 முதல் 2004 வரை, மற்றும் 2006 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதில் தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யும் முன்னர், அந்நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்த அப்போதைய நிலக்கரித்துறை செயலாளர் பி.சி. பரேக்கிடம் தீவிர விசாரணையை சிபிஐ நடத்தியது. ஆனால் உரிய விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை என்கிறது சிபிஐ வட்டாரங்கள்.
தொடக்கத்தில் ஹிண்டால்கோ நிறுவனத்தை நிராகரித்துவிட்டு பொதுத்துறை நிறுவனங்களான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் மற்றும் என்.எல்.சி-க்கு பி.சி. பரேக் ஒடிஷா மாநிலத்திலுள்ள தால்பிரா-2 மற்றும் தால்பிரா-3 நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்திருந்தார்.
ஆனால் தமது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு அந்த சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தார். இப்படி முடிவை மாற்றியது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க அவரால் முடியாததால் வழக்கில் அவர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பரேக்குக்கு ஆதரவளிப்போம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications