தனி ரூமில்.. தன் நிர்வாண போட்டோக்களை எடுத்து பதிவிட்ட 15 வயது மகள்.. பெற்றோருக்கு திடீர் மாரடைப்பு
தன் நிர்வாண போட்டோவை பதிவேற்றம் செய்துள்ளார் 15 வயது மாணவி
காந்திநகர்: தன்னுடைய நிர்வாண படங்களை 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தில் பதிவிட்டதால், பெற்றோருக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தலைதூக்கி உள்ளது.. கடந்த 2 வருடமாகவே தொற்று பரவல் பீடித்து வந்ததால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.. இதேசமயம், பிள்ளைகளின் படிப்பு வீணாகிவிடும் என்பதால், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
இதற்காக, எத்தனையோ கூலி வேலை செய்யும் பெற்றோர்கள், கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கி தந்துள்ளனர்..

செல்போன்
எனவே, இந்த 2 வருடமாகவே பிள்ளைகள் செல்போனிலேயே தங்கள் பெரும்பாலான நேரத்தை கழிக்க நேரிடுகிறது.. சில சமயம், தவறாகவும் செல்போனை பயன்படுத்துகின்றனர்... இவர்களை அந்த பெற்றோர்கள் கண்காணிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கொடுமையான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தனி ரூம்
அங்கு வசிக்கும் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அவருடைய பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி தந்துள்ளனர்... மேலும் தன்னுடைய மகள், எந்தவித இடையூறுமின்றி படிக்க வேண்டும் என்பதற்காகவே தனி ரூம் ஒன்றை ஒதுக்கியும் தந்துள்ளனர்.. ஆனால், அந்த பெண்ணுக்கோ இது வசதியாக போய்விட்டது.. அந்த ரூமில் தன்னுடைய முழு நிர்வாண படங்களை எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

நிர்வாண போட்டோக்கள்
அது மட்டுமின்றி தன்னுடைய சொந்தக்கார பெண்ணையும் நிர்வாணப்படங்கள் எடுத்துப் பதிவேற்ற வலியுறுத்தி உள்ளார்... ஆனால், பயந்து போன அந்த பெண், இதை பற்றி தன்னுடைய பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தந்துள்ளனர்.. இதைக் கேள்விப்பட்டதுமே மாணவியின் அப்பா, அம்மா 2 பேருக்குமே அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை
பிறகு அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டுள்ளது.. இதையடுத்து, ஓரளவு குணமாகி பெற்றோர் இருவரும் வீடு திரும்பி உள்ளனர்... எனினும் தங்கள் மகள் செய்த காரியத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர்களால் மீளவே முடியவில்லை.. இறுதியில், தங்கள் மகளை ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்...

அறிவுரை
அந்த மனநல ஆலோசகரும், இப்படியெல்லாம் நிர்வாண போட்டோக்களை பதிவேற்றம் செய்வது சைபர் சட்டப்படி குற்றம், உன்னை இப்போதுகூட போலீசாரால் கைது செய்ய முடியும் என்று எடுத்து சொல்லி அறிவுறுத்தினாராம்.. இதையடுத்து, தன் தவறை உணர்ந்து, இனி அப்படியெல்லாம் செய்ய மாட்டேன், ஒழுங்காக படிக்க போகிறேன் என்று மனம் திருந்தி சொல்லி உள்ளாராம் அந்த பெண்..!












Click it and Unblock the Notifications