பிரான்ஸ் பத்திரிக்கை மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் மணி சங்கர் அய்யர்
டெல்லி: ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் அப்பாவிகளா இல்லையா என்று பிரித்துப் பார்க்காமல் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் பாரீஸ் தீவிரவாத தாக்குதல் உள்ளது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் காங்கிரஸ் அய்யரின் கருத்துக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது போன்று உள்ளது.

பாரீஸ் தாக்குதல் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீங்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு வலியவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று இல்லை. ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியபோது வீடுகள் சேதமடைந்தன, குழந்தைகள் பலியாகின. இதற்கு எதிர்வினை ஏற்படும் என்று தெரிந்தது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் செல்லும் வழியைப் பார்க்கையில் இது போன்று தான் எதிர்வினைகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அது தற்போது நடக்கிறது. அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதை பிரான்ஸ் கண்டறிய வேண்டும்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை எதிர்பார்க்கப்பட்டது. 9/11 தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் துவங்கப்பட்டதில் இருந்து முஸ்லீம் அப்பாவிகளா இல்லையா என்பதை கூட பார்க்காமல் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதை தான் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்துள்ளது. மேலும் தற்போதும் சிரியாவிலும் செய்ய உள்ளது. அதனால் எதிர்வினை ஏற்படத் தான் செய்யும்.
முஸ்லீம் பெண்கள் புர்கா அணியக் கூடாது என்கிறார்கள். இது முஸ்லீம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் உள்ள வேற்றுமையில் ஒற்றுமையை மேற்கத்திய நாடுகள் கற்கவில்லை என்றார்.
பாரீஸ் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அய்யர் இவ்வாறு பேசியுள்ளார். அய்யரின் கருத்துக்கு பாஜக, ஆத் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications