அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு சபைகளும் ஒத்திவைப்பு!
டெல்லி: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளும் 2 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேகலாயாவில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் அப்துல் கலாம் உயிர் பிரிந்தது. அவரது மறைவு நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு 7 நாட்கள் அரசுமுறை துக்கமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடின. லோக்சபாவில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ராஜ்யசபாவில் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தியை வாசித்தனர்.
இதன் பின்னர் லோக்சபா 2 நாட்களுக்கும் மற்றும் ராஜ்யசபா ஒருநாள் மட்டும் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ராஜ்யசபாவையும் 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications