இப்படி கூட நடக்குமா? என்ஜின் இல்லாமல் திடீரென ஓடிய ரயில்.. ஷாக்கில் உறைந்த பயணிகள்..இந்தியாவில் தான்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சஹிபாஞ்ச் பகுதியில் வழக்கத்திற்கு மாறான ஒரு வினோத சம்பவம் நடைபெறுள்ளது. ரயிலில் என்ஜின் இல்லாமல் நிறுத்தப்பட்டு இருந்த பெட்டிகள் தானாக திடீரென ஓடியது. லோகோ பைலட் உள்பட ரயில் பெட்டியில் யாரும் இல்லை. இந்த வினோத சம்பவம் குறித்த முழு விவரம் வருமாறு:-
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஷகிபாஞ்ச் பகுதியில் உள்ள பர்ஹர்வா பகுதியில் காலி ரயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. மல்டா ரயில்வே டிவிஷன் அதிகார வரம்புக்கு வரும் இந்த ரயில் நிலையத்தில், சரக்குகளை இறக்குவதற்காக ரயில் நிறுத்தப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. அப்போது திடீரென ரயில் தானாக நகரத் தொடங்கியது. தொடர்ந்து தண்டவாளத்தில் சில மீட்டர் தொலைவிற்கு ரயில் தானாக ஓடியது.

இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் ரயில் தானாக ஓடியதை ஆச்சர்யத்துடன் பார்த்த படி ஆபத்தை உணராமல் ஓடிச்சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். சில இளைஞர்களோ செல்பியும் எடுப்பதை பார்க்க முடிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. எக்ஸ் தளத்தில் உத்கர்ஷ்சிங் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு கேப்ஷான அவர் பதிவிட்டுள்ள பதிவில், "என்ஜின் இல்லாமல் ரயில் ஓடியதை எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? ஜார்க்கண்டின் சஹிபஞ்ச் பகுதியில் ரயில் என்ஜின் இல்லாமலேயே ஓடியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மெயின் டிராக்கில் ரயில் பெட்டிகள் சென்றுள்ளது. நல்லவேளையாக வேறு எந்த ரயிலுடனும் மோதவில்லை" என்று கூறியுள்ளார்.
ரயில் பெட்டிகள் தானாக ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்களும் தங்கள் கருத்துக்களை ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ரயிலில் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் ரயில்வே ஊழியர்கள் ஏன் நிறுத்தி வைத்தார்கள் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல், ஆபத்தை உணராமல் ஓடிச்சென்று செல்போனில் வீடியோ எடுப்பவர்களும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக நெட்டிசன்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
ரயில்வே டிராக்கில் யாராவது வழக்கம் போல ரயில் நின்று கொண்டு தானே இருக்கிறது என அலட்சியமாக தண்டவாளத்தை கிராஸ் செய்தாலோ.. அல்லது வேறு ரயில்கள் அவ்வழியாக வந்து இருந்தாலோ பெரும் விபரீதம் ஏற்பட்டு இருக்கும் எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ரயில் பெட்டிகள் தானாக ஓடிய சம்பவம் தொடர்பாக உள்ளூர் ரயில்வே அதிகாரிகள் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications