Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதன்கோட்டில் உடம்பில் 6 தோட்டாக்கள் பாய்ந்தும் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய சைலேஷ்

Subscribe to Oneindia Tamil

பதன்கோட்: பதன்கோட்டில் தீவிரவாதிகள் சுட்டதில் தனது உடலில் 6 குண்டுகள் பாய்ந்தும் ஒரு மணிநேரம் போரிட்ட கருட் கமாண்டோ வீரரான சைலேஷ் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமான தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 பேர் பலியாகினர். 3 நாட்கள் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Pathankot Braveheart Who Took 6 Bullets, Kept Fighting

இந்நிலையில் தாக்குதல் சமயத்தில் நடந்த சம்பவம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகள் விமானப்படை தளத்திற்குள் நுழைந்த தகவல் கிடைத்தவுடன் அதிகாலை 3 மணிக்கு கருட் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 12 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

2, 2 பேராக அவர்கள் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளை தேடிச் சென்றுள்ளனர். குர்சேவக் என்ற வீரர் தீவிரவாதிகளை நோக்கி சுட அவர்கள் பதிலுக்கு சுட்டதில் அவர் மீது 3 குண்டுகள் பாய்ந்தது. இருப்பினும் அவர் தீவிரவாதிகளுடன் போராடி பின்னர் பலியானார்.

குர்சேவக் இறந்தவுடன் சைலேஷ் மற்றும் கட்டல் ஆகிய வீரர்கள் குழு துப்பாக்கி மற்றும் மெஷின் கன்களுடன் தீவிரவாதிகளுடன் போராடியது. தீவிரவாதிகள் சுட்டதில் சைலேஷின் வயிற்றுப் பகுதிக்கு கீழ் 6 குண்டுகள் பாய்ந்தன. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சைலேஷ் ஒரு மணிநேரமாக தீவிரவாதிகளை எதிர்த்து போராடியுள்ளார்.

குண்டு பாய்ந்து 3 மணிநேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைலேஷ் தற்போது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். நாட்டுக்காக தனது உயிரை மதிக்காமல் போராடிய அந்த வீரர் நலம் பெற மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். நாமும் பிரார்த்திக்கலாமே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+