For Daily Alerts
Just In
பதன்கோட் தாக்குதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! பாக். தீவிரவாத அமைப்பு மீது குற்றச்சாட்டு
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என இந்திய தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகள் இரு நாட்கள் தேடுதல் வேட்டையில் கதை முடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்று என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் ஆசார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தீவிரவாதிகள் முப்தி அப்துல் ரவுப் அஸ்கார், ஷாகித் லத்தீப், கஷிப் ஜான் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
Comments
English summary
The National Investigation Agency on Monday filed a chargesheet in connection with the Pathankot attack. The NIA has named five persons including Jaish-e-Mohammad chief, Maulana Masood Azhar who has been named as the prime accused.
Story first published: Monday, December 19, 2016, 12:02 [IST]