பதன்கோட் தாக்குதல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்! பாக். தீவிரவாத அமைப்பு மீது குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என இந்திய தேசிய பாதுகாப்பு ஏஜென்சி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகள் இரு நாட்கள் தேடுதல் வேட்டையில் கதை முடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்று என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் ஆசார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தீவிரவாதிகள் முப்தி அப்துல் ரவுப் அஸ்கார், ஷாகித் லத்தீப், கஷிப் ஜான் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications