இஷான் கிஷனின் இரட்டை சதம்.. அதைப்பார்த்த பின் நம்பிக்கை தகர்ந்தது.. ஷிகர் தவான் பகிர்வு!
மொஹாலி: இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அனுபவ வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார். அதில் வங்கதேச அணிக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான். இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் எழுச்சியால் இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஷிகர் தவான், இந்திய அணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இருப்பினும் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான்
இதனால் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானும் தனது அனுபவத்தை இந்திய அணிக்கு புரிய வைப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சிக்கு ஷிகர் தவான் பேட்டியளித்துள்ளார்.

ஷிகர் தவான் பேட்டி
அதில் இந்திய அணியில் இருந்து ஒதுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக நான் இருந்தாலும் எனக்கு பதிலாக சுப்மன் கில்லையே தேர்வு செய்வேன். ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா கேப்டன்சியை எடுத்துக் கொண்ட போது, அவரும் டிராவிட்டும் எனக்கு முழு ஆதரவையும் கொடுத்தனர்.

இஷான் கிஷனின் இரட்டை சதம்
2022ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்பில் சிறப்பாக செயல்படும் போது, நடப்பவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசுவதற்கு முன்வரை, எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் இரட்டை சதத்திற்கு பின், அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

ஷிகர் தவானுக்கு பாராட்டு
இது எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் பலருக்கும் நடந்திருக்கிறது. அதனால் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும், ஷிகர் தவானை பாராட்டி வருகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications