ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.- பி.டி.பி. இடையே உடன்பாடு: முதல்வராகிறார் முப்தி முகமது சயீத்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பி.டி.பி.யின் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சயீதுக்கு முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து 28 இடங்களை பிடித்த பி.டிபி.யும், 25 இடங்களை பிடித்த பாரதிய ஜனதாவும் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு, ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெறுவது ஆகிய விவகாரங்களில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.
இதேபோல் மேற்கு பாகிஸ்தானில் இருந்து 25,000 குடும்பங்கள் அகதிகளாக தஞ்சமடைந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் ஆட்சி செலுத்துவதில் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதிலும் இரு கட்சிகளும் தீவிர ஆலோசனை நடத்தி முடிவுக்கு வந்தன.
இதனடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பி.டி.பி. கட்சித் தலைவர் முப்தி முகம்மது சயீது 6 ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்றும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மேலும் இரு கட்சியினருக்குமான இலாகாக்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டனவாம்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் பி.டி.பி.- பா.ஜ.க. ஆட்சி அமையும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications