காஷ்மீரில்தான் பதற்றம்.. 144 எல்லாம்..ஆனால் லே பகுதி நார்மலாகத்தான் இருக்கு.. இந்த வீடியோவை பாருங்க
Recommended Video
ஸ்ரீநகர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மாவட்டமான லே பகுதியில் 144 தடை விதிக்கப்படவில்லை. மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள், அமர்நாத் யாத்ரீகர்கள் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. உச்சகட்ட பரபரப்பில் காஷ்மீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் முன்னாள் முதல்வர்கள் வீட்டுக் காவலில் இருந்து வருகின்றனர்.
#WATCH Jammu & Kashmir: Latest visuals from Leh. People carry out their daily chores normally. Classes in schools, colleges and other educational institutions resumed normally today. Restrictions under Section 144 CrPC have not been imposed in the region. pic.twitter.com/SD8FtNvuI3
— ANI (@ANI) August 5, 2019
#WATCH Jammu & Kashmir: Latest visuals from Leh. People carry out their daily chores normally. Classes in schools, colleges and other educational institutions resumed normally today. Restrictions under Section 144 CrPC have not been imposed in the region. pic.twitter.com/SD8FtNvuI3
— ANI (@ANI) August 5, 2019
காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீரின் முக்கிய மாவட்டமானதும் லடாக் பகுதியின் பெரிய நகரமுமான லே பகுதியில் எந்தவித 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இங்கு மக்கள் வழக்கம் போல் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.