இந்த மழைக்கு இவ்வளவு பெரிய மீனா? மும்பை வீதிகளில் மீன்பிடித்த மக்கள்! வைரலாகும் போட்டோ!

மும்பையில் மழையின் போது ஊருக்குள் புகுந்த மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் போட்டோ வைராலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் மழையின் போது வீதிகளில் மேய்ந்த மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் வாட்டி வதைத்து வந்த வெயில் தற்போது விடைபெற்றுள்ளது. அவ்வப்போது திடீர் திடிரென மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. மும்பை மற்றும் தானே, நவிமும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

மும்பையில் திடீர் மழை

மும்பையில் திடீர் மழை

இந்த மழையின் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழை நீரில் நீந்திய மீன்கள்

மழை நீரில் நீந்திய மீன்கள்

மேலும், தாராவி தோபிகாட் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. அப்போது மழைநீரில் மீன்கள் மேய்வதை பார்த்த அப்பகுதியினர் அதனை உற்சாகமாக பிடித்தனர்.

உற்சாகத்துடன் பிடித்த மக்கள்

உற்சாகத்துடன் பிடித்த மக்கள்

கந்திவிலி பகுதியில் தேஜாஸ் மேத்தா என்பவர் மழையின் போது பிடித்த மீனுடன் போஸ் கொடுத்து அந்த போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அந்தப் போட்டோ தற்போது வைரலாக பரவியுள்ளது.

கூடுதல் மகிழ்ச்சி

மும்பையில் அப்படி ஒன்றும் பெரியளவு மழை பெய்யவில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள் இந்த மழைக்கே வீதிகளில் மீன்கள் மேய தொடங்கிவிட்டதாக கூறினர். வெளுத்த வெயிலுக்கு மழையே இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்று கூறிய மக்கள் இதனால் மீன்கள் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+