'அத்திப்பட்டி' போல மாயமாகும் ஆபத்து.. கர்நாடக மாநில கிராமத்தில் மக்கள் வெளியேற்றம்
குடகு மாவட்டம், காரிகேவில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதால் அங்கிருந்து 15 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து நிலச்சரிவு ஆபத்து உள்ள இடத்தில் இருந்த 15 குடும்பங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், சூரத்கல்லில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் புவியியல் துறை உதவி விரிவுரையாளர் அனன்யா வாசுதேவ், குடகு மாவட்டத்தில் உள்ள கார்கே கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த நேரமும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அங்குள்ள மக்களை அகற்ற வேண்டும் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், கேரளாவின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. அதே போல, கர்நாடகாவில் குறிப்பாக குடகு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. குடகு மாவட்டத்தில் நிலச்சரிவும் வெள்ளமும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், குடகு மாவட்டத்தில் உள்ள காரிகே கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைக்கு கீழே மண் அரிப்பு ஏற்பட்டு குகைபோல வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவு இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி அகற்ற வேண்டும் என்று கர்நாடகா என்ஐடி புவியியல் வல்லுநர் அனன்யா வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய புவி அறிவியல் மையத்தின் பயிலரங்கில் மண் குழாய் பற்றிய விவரங்களைக் கற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தேசிய பேரிடர் கண்காணிப்பு மையமு காரிகே பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதை உறுதி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, காரிகே பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மொத்த இடமும் மாயமாகும் அபாயம் உள்ள பகுதியில் குடியிருந்த 15 குடும்பங்களை பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டு வேறு இடத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications